search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேடம் துசாட்ஸ்"

    கையில் துடைப்பத்துடன் மகாத்மா காந்திக்கு மெழுகு சிலை வைக்க வேண்டும் என மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்துக்கு பிரதமர் மோடி பரிந்துரை செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #CleanIndia #PMModi #MadameTussauds
    புதுடெல்லி:

    உலகப்புகழ் பெற்ற பிரபலங்களின் மெழுகு சிலைகள் லண்டன் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியிலும் இதேபோன்ற அருங்காட்சியகம் கடந்தாண்டு இறுதியில் திறக்கப்பட்டது. இங்கு, மகாத்மா காந்தி, பகத்சிங், நேதாஜி, அப்துல்கலாம் உள்ளிட்ட பல தலைவர்களுக்கு மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி, அமிதாப் பச்சன், டாம் குரூஸ், சல்மான் கான், சச்சின், கோலி உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு இங்கு மெழுகு சிலை உள்ளது. இந்நிலையில், இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் முன்னர் அதன் நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி கூறிய பரிந்துரை ஒன்றை அருங்காட்சியக நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.

    தூய்மை இந்தியா திட்டத்தை பிரதிபலிக்கும் வண்ணம், 1.25 பில்லியன் மக்களை தூய்மை குறித்து ஊக்குவிக்கும் வண்ணம் மகாத்மா காந்தியின் கையில் துடைப்பத்துடன் இருக்கும் படி மெழுகு சிலை வைக்க வேண்டும் என மோடி, அருங்காட்சிய நிர்வாகிகளை கேட்டுள்ளார்.

    மேலும், காந்தி கையில் துடைப்பம் வைத்திருக்கும் படியான புகைப்படத்தை தான் அனுப்புவதாகவும் அவர் கூறியுள்ளார். 

    எனினும், மகாத்மா காந்தி கையில் நீண்ட குச்சி வைத்திருக்கும் படியான மெழுகு சிலையே வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
    டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மெழுகு சிலை இன்று வைக்கப்பட்டுள்ளது. #viratkholi #MadameTussaudsDelhi
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்றவற்றில் ஈடுபட்டு வரும் பிரபலங்களுக்கு மெழுகினால் ஆன ஆள் உயர சிலை வைக்கப்பட்டுள்ளன.

    இந்த வரிசையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. விராட் இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். கோலி தலைமையிலான இந்திய அணி பல வெற்றிகளை கண்டுள்ளது. அவர் ஐபிஎல் தொடரில் 2013-ம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். அவரின் வெற்றிகளை பாராட்டும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சிலை அமைப்பதற்காக விராட் கோலியின் உடல் அளவுகள் எடுக்கப்பட்டன.


    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்ரன் விராட் கோலியின் மெழுகு சிலையானது இன்று திறக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய விராட் கோலி, 'மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். என்னுடைய சிலையை மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய வாழ்நாள் நினைவுச்சின்னம் வழங்கிய மேடம் துசாட்ஸ் குழுவிற்கு நன்றி' எனக்குறிப்பிட்டிருந்தார்.

    மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின், கபில் தேவ், உசைன் போல்ட், கால்பந்து வீரர் ரொனால்டோ, மெஸ்சி ஆகியோரின் மெழுகுச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #viratkholi #MadameTussaudsDelhi

    ×